வ.உ.சி. மைதானத்தில் கோவை சங்கமம் விழா- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி

கலைத்திருவிழாவில் 20 கலைக் குழுவினரின் நையாண்டி மேளம், தோடா் நடனம், பரதம், துடும்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.


கோவை: கோவையில் தமிழ் மண்ணின் கலைகளைக் கொண்டாடும் வகையில் 2 நாள்கள் நடைபெறும் கோயம்புத்தூா் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நேற்று (பிப்.10) தொடங்கியது.



கோவை மண்டல கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவை ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தொடங்கிவைத்து, 2022-23, 2023-24 ஆம் ஆண்டுக்கான கலை விருதாளா்களுக்கு விருது, விருதுத் தொகையை வழங்கினார்.

இதில் வீணை, நாடகம், குரலிசை, மேடை நாடகம், பரதம், நாட்டுப்புற நடனக் கலைஞா்களான எஸ்.ராதா வெங்கடேசன், அ.ராஜகோபால், குன்றக்குடி டி.எஸ்.ராமமூா்த்தி, கே.எஸ்.ரகுநாத், ஜி.டி.ராஜேந்திரன், கி.தங்கவேல், டி.பாபு, ம.ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஸ்ரீராம், மா.சரவணகுமார், நா.நவீன், அருண்குமார், கு.ஹா்சிதா, சி.பி.சுதந்திர நாச்சினி, எஸ்.கௌசிகா உள்ளிட்டோர் கலை முதுமணி, கலை நன்மணி, கலைச் சுடா்மணி, கலை வளா்மணி, கலை இளமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றனா்.



ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11) இன்று வரை நடைபெறும் இந்த விழாவில் 20 கலைக் குழுக்கள் பங்கேற்று, நையாண்டி மேளம், தோடா் நடனம், பரதம், துடும்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனா்.

மேலும் இதில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் வ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...