உடுமலை அருகே சின்னாறு வனப்பகுதியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

வனப்பகுதி, குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் கட்டமாக தீயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சின்னாறு வனப்பகுதியில் வனச்சரகர் சிவக்குமார் ஏற்பாட்டில் கோடந்தூர், பொற்பாற்குடி, ஆட்டுமலை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு உடுமலை தீயணைப்புத்துறை சார்பில் கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வனப்பகுதி, குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் கட்டமாக தீயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.



வனப்பகுதியில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது எனவும், இரவு நேரங்களில் வனவிலங்குகளை விரட்ட தீ பந்தம் போன்றவை பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்டு வனவிலங்குகளை விரட்ட வேண்டும் எனவும் மலைவாழ் மக்களுக்கு உடுமலை தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஐந்து கிராம மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர்

கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...