உடுமலையில் செண்டுமல்லி பூக்கள் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

செண்டுமல்லி பூ சாகுபடி குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும். நாற்றுகள் உடுமலை பகுதியில் மானியத்தில் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள புங்கமுத்தூர், தளி, பாப்பனூத்து, பெரியகோட்டை, ராஜாவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை சீசனுக்காக கோழிகொண்டை, செண்டு மல்லி உட்பட பல்வேறு பூ சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சொட்டுநீர் பாசன முறையில் குறைந்த அளவு தண்ணீர் தேவை, சாகுபடி செலவு குறைவு, முகூர்த்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற அடிப்படையில் பரவலாக ஆண்டு முழுவதும் பகுதிகள் விவசாயிகள் சாகுபடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, உடுமலை பகுதியில் செண்டு மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாங்கி வருகின்றோம். ஏக்கருக்கு 12,000 நாற்றுகள் வரை நடவு செய்து 60 நாட்களில் பூ அறுவடையை துவக்கலாம். நடப்பு சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளோம்.

பூ சாகுபடி குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும் மற்றும் நாற்றுகள் உடுமலை பகுதியில் மானியத்தில் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். விசேஷ நாட்களில் மட்டும் பூக்கள் அதிகளவு விற்பனையாகி வருகின்றது. விசேஷம் இல்லாத நாட்களில் பூக்கள் வாங்காமல் கருகும் அபாயம் உள்ளதால் அரசு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...