உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆட்சியர் ஆய்வு

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்திருந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி நகர் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு கான்கிரீட் வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் இலங்கை தமிழர் முகாமில் கட்டப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று திடீரென திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் இலங்கைத் தமிழர் மறுவாழ் முகாமில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் கூறியாவது, தற்பொழுது முகாமில் கான்கீரிட் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வீடுகளில் டைல்ஸ் மற்றும் சமையலறையில் மேசை மற்றும் குடிநீர் இணைப்பு உள்ள அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

தெரு விளக்கு சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் ஆட்சித் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆட்சித் தலைவர் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சித் தலைவர் கூறினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வின் போது உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், உடுமலை ஒன்றிய வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடுமலை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...