உடுமலையில் தக்காளி விலை கடும் சரிவு – நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

கடந்த மாதம் வரை 14 கிலோ கொண்ட பெட்டி 600 முதல் 800 ரூபாய் விற்று வந்த நிலையில், தற்பொழுது ஒரு பெட்டி 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்த பகுதிகளில் விலையும் தக்காளிகளை உடுமலை சந்தைக்கு கொண்டுவரப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கேரள மாநிலம் மறையூர், மூணாறு மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது. மழைப்பொழிவு காரணமாக தற்பொழுது தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்து உள்ள காரணத்தால் தக்காளி தரமில்லாமல் மாறி மகசூல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் உடுமலை சந்தையில் தக்காளி விலை கடும் சரிவை செய்துள்ளது.

கடந்த மாதம் வரை 14 கிலோ கொண்ட பெட்டி 600 முதல் 800 ரூபாய் விற்று வந்த நிலையில் தற்பொழுது ஒரு பெட்டி 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகிறது.

விவசாயிகள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாக செடிகள் காய்ந்தும் காய்கள் வெளிர் நிறத்துக்கு மாறியும் பெருமளவு மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விலையும் சரிந்து வருவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...