பட்டா பெற்றும் 23 வருடங்களாக குடியேறாமல் இருந்த இருகூர் கிராம மக்களை குடியேற வைத்த கம்யூனிஸ்ட் கட்சியினர்

23 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளர்களின் பட்டியலை கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல தாசில்தார் மாலதி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, வருவாய் ஆய்வாளர் முருகன், சர்வேயர் கணேசன் ஆகியோர் தலைமையிலான குழு இருகூர் சமுதாய நலக்கூடத்தில் பயனாளர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர்.


கோவை: கோவை மாவட்டம் இருகூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட மக்கள் சுமார் 244 பேருக்கு கடந்த 2001 ஆம் வருடம் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இலவச வீட்டு மனை வழங்கப்பட்ட இடம் தங்களுக்கு சொந்தம் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து கொண்டே இருந்தனர்.



ஆனால் இவற்றையெல்லாம் இருகூர் ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் இணைந்து 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறு நீதிமன்றங்களில் இருந்த வழக்கை முடித்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு கொடுத்த வீட்டுமனை பட்டாக்கள் உரிய இடம் அவர்களுடையதுதான் என்று நிரூபித்தனர்.

கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளர்களின் பட்டியலை கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல தாசில்தார் மாலதி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, வருவாய் ஆய்வாளர் முருகன், சர்வேயர் கணேசன் ஆகியோர் தலைமையிலான குழு இருகூர் சமுதாய நலக்கூடத்தில் பயனாளர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர்.



விரைவில் அவர்களுக்குரிய இடத்தை மீட்டுக் கொடுத்து அதில் அவர்களை குடியேற வைப்பதே எங்களுடைய நோக்கம் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் யூ கே சிவஞானம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன், இருகூர் பேரூராட்சி 8வது வார்டு உறுப்பினர் ஸ்டாலின் குமார், வழக்கறிஞர் ராமர், இருகூர் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சிஐடியு தலைவர் விஜயராகவன், செயலாளர் பிரகாஷ், குருசாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு உதவி செய்தனர். விரைவில் தங்களுக்குரிய கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...