அதிமுகவுக்கு நிரந்தர எதிரி திமுக தான் - கோவையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியது மாநில அரசின் கடமை. அதிமுக மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற்று மக்கள் திட்டங்களை செய்தது என முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜைகள் மற்றும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட குடிநீர் சுத்தகரிப்பு நிலையங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து குடிநீர் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியது மாநில அரசின் கடமை, அதிமுக மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற்று மக்கள் திட்டங்களை செய்தது.

அதே நடைமுறையை திமுக பின்பற்ற வேண்டும். அதிமுகவை பொருத்தவரை திமுக என்ற கட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டது. தமிழகத்தில் அதிமுகவுக்கு திமுக நிரந்தர எதிரி தான் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...