கோவை கவுண்டம்பாளையம் பகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம்

கோவை வடக்கு மாவட்டத்திலேயே கவுண்டம்பாளையம் தொகுதியில் நமது பகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய இரவு பகல் அயராது பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதி தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது, இக்கூட்டம் பகுதி செயலாளர் சரத் விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது.



முன்னாள் பகுதி செயலாளர் சுந்தரம், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்துகொண்டு பேசினார்.



கூட்டத்தில் கோவை பாராளுமன்றத் தொகுதியை இந்தமுறை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய அயராது பாடுபடுவது, சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறைக்கு எதிராக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவை கடுமையாக கண்டிப்பது, இ.வி.எம். வாக்குபதிவு முறையை மாற்றி வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும், கோவை வடக்கு மாவட்டத்திலேயே கவுண்டம்பாளையம் தொகுதியில் நமது பகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய இரவு பகல் அயராது பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மேலும் கூட்டத்தில் மறைந்த முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர் பையா என்கிற கிருஷ்ணன், நகர துணைச் செயலாளர் ஈஸ்வரன் தகப்பனார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் நடராஜன் தாயார், 17வது வட்டக் கழக பிரதிநிதி சங்கரின் தாய், தந்தை ஆகியோர் மறைவிற்கு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இக்கூட்டதில் மாமன்ற உறுப்பினர்கள் சுபஸ்ரீ சரத், தமிழ் செல்வன், கிருஷ்ணமூர்த்தி, வட்ட செயலாளர்கள் குட்டி வேலுசாமி, தன்ராஜ், ரமணன், குமரேசன், காளிதாஸ், நிர்வாகிகள் சங்கர், லோகநாதன், சனில், வசந்த், சண்முகம், ஈஸ்வரன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மனோஜ் உள்பட மகளிர் அணியினர், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...