பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு குனியமுத்தூரில் வினா-விடை வங்கி புத்தகத்தை வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மாணவர்கள் சிறந்த முறையில் படித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டும் என்று பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வினா-விடை வங்கி புத்தகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் குனியமுத்தூர் பகுதிக்கழக அலுவலகத்தில் ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்க்காக மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா வினா- விடை வங்கி புத்தகங்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



புத்தகங்களை பெற்றுக்கொண்ட மாணவ, மாணவியர், முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணியுடன் குழுவாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.



மேலும் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி, 26 வருடமாக விலையில்லா வினா- விடை வங்கி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி முதல் மிதிவண்டி வரை அம்மா வழங்கினார். அவரை பின்பற்றி அண்ணன் எடப்பாடியார் அவர்களும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார். ஆனால் தற்போதய திமுக அரசு மாணவர்களுக்கு அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டது.

மேலும் குனியமுத்தூர், குளத்துப்பாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள், நவீன உபகரணப்க்கள் அனைத்தும் நமது அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினா- விடை வங்கி புத்தகமானது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கடந்த முறை தேர்ச்சி பெற்ற பல மாணவர்களும் 80 சதவிகிதம் வரை அதிக மதிப்பெண்கள் பெருவதற்கு பேருதவியாக இருந்ததாக தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...