பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு குனியமுத்தூரில் வினா-விடை வங்கி புத்தகத்தை வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மாணவர்கள் சிறந்த முறையில் படித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டும் என்று பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வினா-விடை வங்கி புத்தகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் குனியமுத்தூர் பகுதிக்கழக அலுவலகத்தில் ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்க்காக மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா வினா- விடை வங்கி புத்தகங்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



புத்தகங்களை பெற்றுக்கொண்ட மாணவ, மாணவியர், முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணியுடன் குழுவாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.



மேலும் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி, 26 வருடமாக விலையில்லா வினா- விடை வங்கி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி முதல் மிதிவண்டி வரை அம்மா வழங்கினார். அவரை பின்பற்றி அண்ணன் எடப்பாடியார் அவர்களும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார். ஆனால் தற்போதய திமுக அரசு மாணவர்களுக்கு அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டது.

மேலும் குனியமுத்தூர், குளத்துப்பாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள், நவீன உபகரணப்க்கள் அனைத்தும் நமது அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினா- விடை வங்கி புத்தகமானது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கடந்த முறை தேர்ச்சி பெற்ற பல மாணவர்களும் 80 சதவிகிதம் வரை அதிக மதிப்பெண்கள் பெருவதற்கு பேருதவியாக இருந்ததாக தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...