உடுமலையில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியை தொடங்கி வைத்தார் டிஎஸ்பி சுகுமாறன்

10 வயதிற்கு உட்பட்டோருக்கு சப்ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள், தொடுமுறை என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சைலாத் சிலம்பச் சங்கம் நடத்தும் 4-வது ஆண்டு திருப்பூர், கோவை மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பப் போட்டி நடைபெற்றது. உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் தொடங்கிய இந்த நிகழ்வுக்கு லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி, அறக்கட்டளை நிறுவனர் கே. ஆர்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆசான் வீரமணி வரவேற்றார். போட்டியை உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தொடக்கி வைத்தார்.



போட்டிகள் 10 வயதிற்கு உட்பட்ட பிரிவு, சப்ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள், தொடுமுறை என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 650 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது எஸ்.எம்.நாகராஜ், சத்யம் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பூர்,கோவை மாவட்ட சைலாத் சிலம்ப சங்கம் மற்றும் லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...