வால்பாறையில் 1500 பேர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

விண்ணப்பம் அளித்த மூன்றாயிரம் பேரில், சுமார் 1500 பேருக்கு இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை 1500 பேருக்கு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் முகாம் வால்பாறை பகுதியில் நடைபெற்றது. முகாமில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் வேண்டி விண்ணப்பம் செய்தனர். அதனை ஏற்று சுமார் 1500 பேருக்கு இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையிலும் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.

மேலும் இலவச தையல் எந்திரம், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக கடனுதவி, மருத்துவ காப்பீடு அட்டை, தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி, தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, பழங்குடியினர் சான்றிதழ், நத்தம் பட்டா மாறுதல் உத்தரவு, நத்தம் சிட்டா நகல்,பட்டா உறுதிச் சான்று, ஒருங்கிணைந்த சான்று, தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு பெயர் மாற்றம் சான்றிதழ் போன்றவை 1163 பேர்களுக்கு வழங்கப்பட்டது.

சுமார் 84 கோடியே 81 லட்சத்து 60,000 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரம் பள்ளி நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் வட்டாட்சியர் வாசுதேவன் வால்பாறை திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...