குண்டடத்தில் ரேக்ளா பந்தயத்தில் துள்ளி குதித்து சென்ற காளைகள் – உற்சாகத்துடன் பொது மக்கள் கண்டுகளிப்பு

200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் அடிப்படையில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் கோவை, திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் எரகாம்பட்டி நல்லமங்கை உடனமர் நாகேஸ்வரசுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் செம்மேகவுண்டன்பாளையம் சாலை முதல் வெறுவேடம்பாளையம் சாலை வரையில் 48 ஊர் கிராம மக்கள் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

போட்டியில் 400 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. நேர ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயத்தில் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் அடிப்படையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கோவை, திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

200 மீட்டர் போட்டிகளை சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் மற்றும் நந்தவனம்பாளையம் தலைவர் தனசெல்வி நாச்சிமுத்து ஆகியோரும், 300 மீட்டர் பந்தயங்களை குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், துணைத் தலைவர் மனோரஞ்சிதம் மகேஷ் ஆகியோரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இப்போட்டிகளில் 200 மீட்டர் பிரிவு 300 மீட்டர் பிரிவுகளில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு தங்ககாசு, நினைவு கோப்பை, நினைவுபரிசு, மெடல் ஆகியவற்றை 48 ஊர் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த ரேக்ளா பந்தயத்தை காண குண்டடம், எரகாம்பட்டி, மேட்டுக்கடை, ருத்ராவதி, கள்ளிவலசு, பூளவாடி, தாராபுரம், பல்லடம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேக்ளா பந்தயத்தை கண்டுகளித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...