கார்பைட் கற்கள், எலீசியம் இராசயன பொடி மூலம் பழுக்கவைக்கப்பட்ட ஐந்தரை டன் மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்கள் பறிமுதல்

கோவை உக்கடம் பகுதியில் கார்பைட் கற்கள் மற்றும் எலீசியம் என்னும் இராசயன பொடி மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஐந்தரை டன் எடையுள்ள மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இன்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சோதனையில் அங்கிருந்த கடைகளில் சப்போட்டா மற்றும் மாம்பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கற்கள் மற்றும் எலீசியம் என்ற இராசயன பவுடர் பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து முன்று இடங்களில் சுமார் 5 டன் அளவிற்கு இருந்த மாம்பழங்கள், சப்போட்டா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு குப்பைகளில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.

இது குறித்து பேட்டியளித்த உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜய், தற்போது கோடைகாலம் என்பதால் மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பழ வியாபாரிகள் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கார்பைடு கற்களை பயன்படுத்துகின்றனர். 

இது போன்ற கற்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் கார்பைடு கற்கள் மூலம் பழங்கள் பழுக்க வைப்பது தொடர்கிறது. தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எத்தீலின் என்ற பொடியை புதிதாக பயன்படுத்தி வருவதும் சோதனையில் தெரியவந்துள்ளது. 

இந்த பழங்களை சாப்பிடுவதன் காரணமாக வயிற்று வலி, நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் உட்பட பலவித நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது போன்ற சோதனைகள் மாவட்டம் முமுவதும் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜய் தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...