கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள், தவில் மற்றும் இசைக் கலைஞர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.


கோவை: கிராமப்புறத்தில் நடக்கும் தீண்டாமைக்கு உரிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மத்திய, மாநில அரசுகள் கல்வி, அரசு வேலை வாய்ப்புகளை தங்கள் சமூகத்திற்கும் ஒதுக்க வேண்டும், முடி திருத்தம் நலவாரியத்தில் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமிக்க வேண்டும், மாநகராட்சி நகராட்சி ஊராட்சி பேரூராட்சியில் இயங்கி வரும் சலூன் கடைகளில் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.



கிராமப்புறங்களில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் மருத்துவ சமுதாய மக்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும், இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள், தவில் மற்றும் இசைக் கலைஞர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...