மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.401.57 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல்

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 50 பணிகளும், மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 250 கி.மீ அளவிற்கு நீர்வரத்துக் கால்வாய்களையும், ரூ.401.57 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம், நல்லட்டிபாளையம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை (ஆழியாறு) யின் மூலம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்வரத்து கால்வாய்கள் குடிமராமத்துப்பபணிகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தவறியதால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சியினை சமாளிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



வருங்காலத்தில் நீர்நிலைகளை புணரமைத்து தண்ணீர் தேக்கி வைத்திடும் அளவிற்கு நீர்வள ஆதார மேலாண்மை மேம்படுத்திடவும், நீர்பயண்பாட்டை முறையாக ஒழுங்கு படுத்தவும், தற்போது இத்திட்டம் தொடங்கப்பட்டு, இச்சீரமைக்கும் பணி 14.03.2017 முதல் நமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொதுப் பணித்துறையின் மூலம் 50 நீர்வரத்துக் கால்வாய்கள், ரூ.231.51 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் நொய்யல், பவானி, ஆழியாறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் சிற்றருவிகள் ஆகியவற்றிலுள்ள முதன்மை வாய்கால்களிருந்து வரும் துணை கால்வாய்களில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதன் மூலம் இப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் 1,29,137 ஏக்கர் பாசனப்பகுதிகளுக்கு நீர்தேக்கி பயன்படுத்தும் நிலை உறுவாகும். தற்பொழுது வடசித்தூர் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் 2963 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

இவ்வாறு நீர்நிலை வாய்க்கால்களை சீர்செய்வதன் மூலம் தண்ணீர் வரத்துப்பகுதியிலிருந்து கடைமடை வரை நீர் சேதாரமின்றி சமச்சீராக வருவதன் மூலம் ஆங்காங்கே உள்ள சிறு குளங்கள் ஏரிகளுக்கு தண்ணீர் தேக்கி வைத்துக்கொள்ள மிகப்பயணுள்ளதாக இருந்திடும்.

இதேபோல், மாவட்டத்தில் மற்றப்பகுதிகளிலுள்ள அனைத்துக் கால்வாய்களும் விடுபடாமல் சீரமைக்கப்படும். 

மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் மூலமாகவும், பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்குடன் அதே வேலையில், நீர்நிலை ஆதாரங்களை நிலை நிறுத்த ஏதுவாக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் மூலம் சுமார், 250 கி.மீ தூரத்திற்கு ரூ.170லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்துக்கால்வாய்கள் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் 49 கண்மாய்களில் வரும் மழை காலத்தில் தண்ணீர் தேக்கி விவசாயப்பணிகள் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் நிலை உறுவாக்கபட்டுள்ளது. இதேபோல், நடப்பு நிதியாண்டில் மற்றப்பகுதிகளிலும் நீர்வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கப்படும்.

எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சந்திரசேகரன், பொதுப்பணித்துறை ஆழியாறு வடிகால் கோட்ட செயற்பொறியாளர் முத்துச்சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...