கோவை மேற்கு மண்டல பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையாளர்

ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு, பில்லூர்–III கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (22.02.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டு, முன்னதாக, மத்திய மண்டலம், இராமலிங்கம் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் (CSR Fund) சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கணினி ஆய்வகம், நூலகம், அறிவியல் ஆய்வகம் மற்றும் சத்துணவுக் கூடத்தினையும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த ஆய்வில், கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரூ.98.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளிக்கான பிரத்யேக தங்கும் விடுதி கட்டும் பணி, வார்டு எண்.41க்குட்பட்ட வடவள்ளி, பி.என்.புதூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி கட்டடம் மற்றும் ராம்ஸ் நகர் பகுதியில் நகர்ப்புற சுகாதார துணை மைய நிதியின்கீழ் (UHSC) ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மையம் கட்டடம் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.38க்குட்பட்ட ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு, பில்லூர் – III கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், வார்டு எண்.38க்குட்பட்ட மருதமலை பிரதான சாலை, வடவள்ளி பொம்மனம்பாளையம் ஆர்.ஆர்.அவென்யூ பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் நியாயவிலைக்கடை மற்றும் வடவள்ளி கல்வீரம்பாளையம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் இரண்டு அங்கன்வாடி மைய கட்டடங்களை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் செல்வராஜ், சாந்தி, உதவி ஆணையர் சந்தியா, செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், ஐசக் ஆர்தர், விமலா, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் தலைமையாசிரியர் மரியபுஷ்பம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...