கோயம்புத்தூர் மண்டல மாநாட்டை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், அவர்களின் பெற்றோருக்கு வருமானச் சான்றிதழ், ஆகியவை விரைந்து கிடைக்க வழி செய்யும் வகையில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே இவை அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


கோவை: கோயம்புத்தூர் கொடிசியா திறந்தவெளி மைதானத்தில் இன்று (23.02.2024) தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும், "பெற்றோர்களைக் கொண்டாடுவோம் " கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோயம்புத்தூர் மண்டல மாநாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

உடன் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன்., கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஸ்வேதா சுமன், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அறிவொளி, கண்ணப்பன், நாகராஜா முருகன், இணை இயக்குனர் குமார், முதன்மை கல்வி அலுவலர் ர. பாலமுரளி ஆகியோர் இருந்தனர்.



இதனிடையே, தமிழக அரசின் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்டத்தின் துவக்க விழா கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (பிப்.23) நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி வரவேற்று பேசினார். கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி ஸ்வேதாசுகன் முன்னிலை வகித்தார்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதார் பதிவு திட்டத்தை துவக்கி வைத்தார்.



அதைத்தொடர்ந்து அவர் பேசும்போது ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மற்றும் வருமான வரி சான்றிதழ், போன்றவற்றிற்காக அரசு அலுவலகங்களை தேடி பெற்றோர்கள் செல்வதை தவிர்க்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், அவர்களின் பெற்றோருக்கு வருமானச் சான்றிதழ், ஆகியவை விரைந்து கிடைக்க வழி செய்யும் வகையில் மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளியிலேயே இவை அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமகிருஷ்ணன், தொடக்கப்பள்ளி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர், தலைமை ஆசிரியர் மாரி செல்வி, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...