வால்பாறையில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடக்கம்

புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை இரண்டு கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரூ.2 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கியது. வால்பாறை பகுதியில் இருந்து சோலையார் எஸ்டேட் வரை நகராட்சி சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது இச்சாலை தற்போது கொண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது.

புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை இரண்டு கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.



இதை வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், துணை பொறியாளர் கோகிலா, பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், வால்பாறை திமுக நகரச் செயலாளர் சுதாகர், சரவண பாண்டியன் 14வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், பன்னிரெண்டாவது வார்டு உறுப்பினர் அன்பரசன், ஒப்பந்ததாரர் ரமேஷ், விசிடி ரவி மற்றும் மீசை குமார், ராதா, ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...