கோவை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை – காவல்துறையினர் விசாரணை

தியாவின் கணவருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ளது என்பது காயத்ரிக்கு தெரியவரவும், அவர்களுக்கு கருத்து வேறுபாடு வந்துள்ளது. இதனால் திருமணம் ஆகி ஒரு மாதகாலத்திற்குள் தனது தாயார் வீட்டுக்கு அவர் வந்து விட்டார். இந்நிலையில் பெற்றோருடன் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஜவகர்நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கணேசன் 65. இவரது மனைவி விமலா (55). இவரது மகள் தியா காயத்ரி (25). மூன்று பேரும் மேற்படி முகவரியில் வசித்து வருகிறார்கள். இவரது மகள் தியா காயத்ரிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி தீட்சித் என்பவருடன் திருமணம் முடிந்து இருவரும் ஐடி கம்பெனியில் வேலை செய்வதால் பெங்களூரில் வசித்து வந்தனர்.

கணேசன் என்பவர் கோவையில் புரூக் பாண்டில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். மேற்படி திருமணம் முடித்த தியா காயத்ரிக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. தியாவின் கணவருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ளது என்பது காயத்ரிக்கு தெரியவரவும், அவர்களுக்கு கருத்து வேறுபாடு வந்துள்ளது.

இதனால் திருமணம் ஆகி ஒரு மாதகாலத்திற்குள் தனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் அவரது தாயார் மற்றும் தந்தையருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.

மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததினால் மூன்று பேரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இது குறித்து சம்பவ இடத்தில் உதவி ஆணையர் மற்றும் கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளர், காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...