முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா- கிணத்துக்கடவில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினர்.


கோவை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை தமிழக முழுவதும் அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.



இதே போல் வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த செ.தாமோதரன் அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த விழாவில் மதுக்கரை நகரச் செயலாளர் சண்முகராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, காந்திநகர் கிளைச் செயலாளர் சிவலிங்கம், கிணத்துக்கடவு பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் கார்த்திக், மகேஷ் குமார், மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...