வால்பாறை ஆழியார் சாலையில் நள்ளிரவில் சென்றுகொண்டிருந்த காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானைகள்

சுமார் இரவு ஒரு மணி அளவில் ஆழியார் சோதனை சாவடியை கார் கடந்து வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரின் குறுக்கே நின்று காரை தாக்கியது. இதில் காரில் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஆழியார் பகுதியில் சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையில் உலாவி வருகிறது.



இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நேற்று இரவு வால்பாறையை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது ஆம்னி காரை பழனிக்கு வாடகைக்கு சென்றுவிட்டு மீண்டும் வால்பாறைக்கு வந்து கொண்டு இருந்தார். சுமார் இரவு ஒரு மணி அளவில் ஆழியார் சோதனை சாவடியை கடந்து வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரின் குறுக்கே நின்று காரை தாக்கியது.

இதில் காரின் கண்ணாடி கதவு முற்றிலும் சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். காரை சாமர்த்தியமாக ஓட்டி பயணிகளின் உயிரை காப்பாற்றி ஓட்டுநர் வால்பாறை வந்து சேர்ந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இரவு நேரத்தில் ஆழியாறு சாலையில் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவித்து வருகின்றனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...