தாராபுரத்தில் ரூ.12.50கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாளை திறப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடத்தின் இறுதி கட்ட பணிகளையும், கல்லூரி ஆய்வகங்கள், காணொலி காட்சி மன்ற கூடங்கள் மற்றும் கல்லூரி கட்டிடம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த ஓராண்டு ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்ட அரசு சுமார் ரூ.12.50 கோடி செலவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது பணிகளை நிர்ணயித்த ஓராண்டு காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டார்.



இதன் கட்டுமான பணிகளுக்கு கடந்த டிச 23,ந் தேதி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமி பூஜை செய்து ஐ.டி.ஐ வளாகத்தில் பணியை தொடங்கி வைத்தனர்.

அதன் முதற்கட்டபணி தொடங்கி வைத்தார். தாராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல தற்போது பணி நடைபெற்று வருகிறது.

அரசு கலைக் கல்லூரி கட்டிடம் நிரணயிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

அதன் இறுதி கட்ட பணிகளையும் கல்லூரி ஆய்வகங்கள், காணொலி காட்சி மன்ற கூடங்கள் மற்றும் கல்லூரி கட்டிடம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து இனறு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கோவை மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி, தாசில்தார் கோவிந்தசாமி, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வி.கமலக்கண்ணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...