உடுமலையைச் சேர்ந்த களரி பயட்டு வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி உயரிய ஊக்கத்தொகை வழங்கி கௌரவிப்பு

விக்னேஸ்வரன் சுவடுகள் பிரிவில் வெண்கல பதக்கமும், உரிமி வீசல் பிரிவில் விசாலி வெண்கல பதக்கமும், கெட்டுக்கரி பிரிவில் ஜீவா, ருத்ரேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய, சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற 601 பேருக்கு 16.31

கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 37வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதி கோவாவில் நடைபெற்றது.

இதில் களரிப் போட்டி முதல் முறையாகச் சேர்க்கப்பட்டது. தமிழக அணி சார்பாக 8 பேர் கலந்து கொண்டு, அதில் நான்கு பேர் வெண்கல பதக்கம் வென்றனர். விக்னேஸ்வரன் சுவடுகள் பிரிவில் வெண்கல பதக்கமும், உரிமி வீசல் பிரிவில் விசாலி வெண்கல பதக்கமும், கெட்டுக்கரி பிரிவில் ஜீவா, ருத்ரேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இவர்களுக்கும் திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா களரிப் போட்டியில் வெற்றி பெற்ற சுர்ஜித்திற்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயரிய ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

இந்த ஊக்கத் தொகை விளையாட்டு வீரர்களின் மேற்படிப்பிற்கும், குடும்ப பொருளாதாரத்திற்கும் பெரும் உதவிகரமாக இருக்கும் என்றும், உயரிய ஊக்கத் தொகை வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு களரிப் பயட்டு செயலாளர் வீரமணி ஆசான் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...