வருங்கால இந்தியா வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும் - கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்துவார்கள் என முழுமையாக நம்புகிறோம் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் பேசினார். அப்போது அவர் பேசியாதவது, பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட கூட்டத்தில், கலந்து கொள்ள வந்த என்னை தமாக தொண்டர்கள் திரளாக வரவேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான தமாக தொண்டர்கள், தலைவர்களோடு இணைந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். வரும் கால இந்தியா மிக உயர்ந்த, மதிப்புக்குறிய, வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும்.

அந்த உயர்ந்த நிலைக்கு கடந்த 10 ஆண்டு பிரதமர் மோடியின் ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் திட்டங்கள், சாதனைகள் எடுத்துக்காட்டாக இந்த தேர்தலில் அமையும்.

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்துவார்கள் என முழுமையாக நம்புகிறோம். அதற்கு ஏற்றவாறு களப்பணி அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...