கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகத்தினை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்

குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 6 மையங்கள், தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாக மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.46க்குட்பட்ட இரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன் வீதியில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் (எல் & டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட்) கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலையில் இன்று (29.02.2024) திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.46க்குட்பட்ட இரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன் வீதியில் சாய்பாபா காலனி, ரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 120 குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 6 மையங்கள், தனியார் பங்களிப்புடன் (எல் & டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட்) கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாக மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி குழந்தைகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியின் போது, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, எல் & டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாகி ரவி கட்டாரியா, நிர்வாக தலைவர் அமுல்கேத்திரா, ஒருங்கிணைந்த குழங்தைகள் மேம்பாட்டு சேவைகள் மாவட்ட திட்ட அலுவலர் முருகேஸ்வரி, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் கவிதா பப்பி, ஆண்டாள், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...