உடுமலை அருகே அமராவதி நகரில் மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியர் – காவல்துறை விசாரணை

பயிற்சி மையத்தில் ஆங்கில ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தேவியின் மகனை பிரம்பால் அடித்ததில் மாணவனுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி நகரில் குடியிருந்து வருபவர் தேவி(37). இவரது கணவர் பிரபு ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.



அவர்கள் இருவரையும் அமராவதி நகரில் உள்ள விவேகானந்தா பயிற்சி மையத்தில் சேர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பயிற்சி மைய ஆங்கில ஆசிரியர் ராதாகிருஷ்ணன் என்பவர் தேவியின் மகனை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.



அதைத் தொடர்ந்து தேவி தனது மகனை அமராவதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அத்துடன் அமராவதி நகர் காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.



அதன் பேரில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவன் தாயார் தேவி வாட்ஸ் அப்பில் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் வருகின்றது.

வீடியோவில் கூறியதாவது, நான் குழந்தைகளை சைனிக் எனப்படும் ராணுவ பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் விவேகானந்த பயிற்சி மையத்தில் சேர்த்து இருந்தேன். நான் ஒரு வருடமாக குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்றும், முடிந்த அளவு படிக்கட்டும் என்றும் கூறியிருந்தேன். நான் சொன்னதையும் கேட்காமல் நேற்று முன்தினம் கோச்சிங் சென்டர் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் எனது மகனை அடித்து உள்ளார்.

இதனால் எனது மகனுக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து எனது மகனை அமராவதி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுடன் அமராவதி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து உள்ளேன். போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்று பாதிக்கப்பட்ட மாணவன் தாய் தேவி வாட்ஸ் அப்பில் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. உடுமலை அருகே மாணவனை பயிற்சி மைய ஆசிரியர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...