கோவையில் வேர்வாடல் நோயின் பாதிப்பு குறித்து ஆய்வு மற்றும் புள்ளி விவரம் சேகரிக்கும் பணி- கோவை TNAU அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் (மார்ச்.1) காலை முதல் நேரடியாக ஆய்வு செய்ய தங்களது தென்னை தோப்புகளுக்கு கிராமம் வாரியாக வரவிருக்கிறார்கள் என்று வேளாண்மை பல்கலைக்கழம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நேற்று (பிப்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, பொள்ளாச்சி தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலை பகுதிகளில் தென்னையில் தற்போது காணப்படும் வேர்வாடல் நோயின் பாதிப்பு குறித்து ஆய்வு மற்றும் புள்ளி விவரம் சேகரிக்கும் பணி நாளை (மார்ச்.1) முதல் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் (மார்ச்.1) காலை முதல் நேரடியாக தங்களது தோப்புகளுக்கு கிராமம் வாரியாக வரவிருக்கிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயப் பெருமக்கள் தென்னந்தோப்பில் எத்தனை மரங்கள் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

சேதாரத்தின் மதிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்கள் தெளிவாக தெரிவிக்கவும். மேலும் தங்கள் புகைப்படம், பண்ணை வரைபடம், ஆதார் அட்டை ஒரிஜினல் மற்றும் ஒரு நகலுடன் தயாராக இருக்குமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறையால் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...