உடுமலை அருகே தலையார் என்ற இடத்தில் அரசு பேருந்தை வழி மறித்து மதம்பிடித்த யானை தாக்குதல்- பயணிகள் அலறல்

நேற்று இரவு சரியாக 9 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது தலையார் என்ற இடத்தில் குறுக்கே வந்த படையப்பா என்ற மதம்பிடித்த ஒற்றை யானை அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்ததால் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக கேரள எல்லை பகுதியான மறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாக படையப்பா என்ற யானை மதம் பிடித்து சுற்றி வருகின்றது .இந்த நிலையில் நேற்று இரவு சரியாக 9 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது தலையார் என்ற இடத்தில் குறுக்கே வந்த படையப்பா என்ற மதம்பிடித்த ஒற்றை யானை அரசு பேருந்தை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டது.



அப்போது பேருந்தில் இருந்த மக்கள் கடும் கூச்சலிட்டனர். இருப்பினும் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை யானை தாக்கியதால் சேதம் அடைந்தது. உடுமலை அருகே அரசு பேருந்தை யானை வழிமறித்து தாக்குதல் நடத்திய காரணத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் நடுவழியில் கடும் அவதி அடைந்தனர்.



இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வரும் நிலையில் மதம்பிடித்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...