சரவணம்பட்டி-துடியலுார் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் புகையிலை விற்பனை செய்த பெண் கைது

சரவணம்பட்டி பகுதியில் மாருதி காரில் புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்துவந்த குழந்தைராஜூ என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் 893 பாக்கெட் புகையிலைப் பொருட்கள், ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: சரவணம்பட்டி-துடியலுார் ரோட்டில், தனியார் கல்லுாரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு நேற்று (பிப்.29) தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பைக்கில் புகையிலைப் பொருட்கள் விற்பனையில் பெண் ஒருவர் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவர் கோவை பீளமேட்டை சேர்ந்த மனோரஞ்சிதம், 38 என்பது தெரிந்தது.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் சரவணம்பட்டி பகுதியில் மாருதி காரில் புகையிலைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் காரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அவற்றை மறைத்து வைத்திருந்த குழந்தைராஜூ என்பவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர் தப்பினார். பின் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார், 893 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள், ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...