சிறந்த ஸ்டார்ட்அப் இன்குபேட்டராக ஏஐசி ரைஸ் தேர்வு - நிதி மற்றும் பரிசினை வழங்கினார் அமைச்சர் டி.எம்.அன்பரசு

சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் டி.எம். அன்பரசு வழங்கிய நிதி மற்றும் பரிசினை, ஏஐசி ரைஸின் சார்பாக ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் மற்றும் இன்குபேஷன் பிரிவின் மேலாளர் பிரதீப் ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.



சென்னை: ஸ்டார்அப் தமிழ்நாடு அமைப்பானது மாநிலம் முழுவதும் சிறந்த இன்குபேட்டர்களை அங்கீகரிக்க நடத்திய ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்குபேட்டர்களுக்கு நிதியினை வழங்கி கௌரவித்தது. இதில் சிறந்த ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் வரிசையில் ஏஐசி ரைஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதற்கான நிதி மற்றும் பரிசினை தமிழ்நாட்டின் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் டி.எம். அன்பரசு வழங்கினார். இதில் ஏஐசி ரைஸின் சார்பாக ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் மற்றும் இன்குபேஷன் பிரிவின் மேலாளர் பிரதீப் ராஜ் ஆகியோர் நிதியினைப் பெற்றனர். இந்நிதியானது ஏஐசி ரைஸின் உள்கட்டமைப்பு மற்றும் ஏஐசி ரைஸின் ஸ்டார்ட்அப்களின் மேலாண்மைக்காக பயன்படுத்தப்படும் என ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு இயக்கனர் சிவராஜ் இராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...