கிணத்துக்கடவில் கார் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து நாசம் - காவல்துறை விசாரணை

அரசம்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்ற ஓட்டுநர் வினோத்குமார் ஆம்புலன்ஸை பின்னோக்கி இயக்கி உள்ளார். அப்போது கோவையில் இருந்து பின்னால் வந்த கார், ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.


கோவை: உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று இரவு கோவையில் நோயாளியை இறக்கிவிட்டு மீண்டும் உடுமலைப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அப்போது பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்ற ஓட்டுநர் வினோத்குமார் ஆம்புலன்ஸை பின்னோக்கி இயக்கி உள்ளார்.



அப்போது கோவையில் இருந்து பின்னால் வந்த கார், ஆம்புலன்ஸ் மீது மோதியது.



இதில் ஆம்புலன்ஸ் மற்றும் காரும் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து மளமளவென எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்ஸில் பற்றிய எரிந்த தீயை அணைத்தனர்.



இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த ஓட்டுநர்கள் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...