மூன்று ஆண்டுகளாக வீட்டு வரியை வாங்காமல் வீரணம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக வடிவேல் என்பவர் புகார்

வீட்டிற்கு வரி செலுத்த சென்றால் ஊராட்சி மன்ற செயலாளர் மனு கொடுத்து விட்டுச் செல்லுங்கள். தற்போது ஆன்லைன் சர்வர் வேலை செய்யவில்லை. தலைவரிடம் வீட்டிற்கு சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என பல்வேறு காரணங்களை கூறி கடந்த மூன்று ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளனர் என்று வடிவேலு என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு தோட்டம் பகுதியில் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருபவர் வடிவேல்.

இவர் இறுதியாக 2020 - 2021 ஆம் ஆண்டில் வீரணம்பாளையம் ஊராட்சி மன்றத்தில் தனது வீட்டிற்கு வரி செலுத்தி உள்ளார். அதற்குப் பிறகு 2022,2023 தற்போது 2024 ஆகிய வருடங்களுக்கு வீட்டிற்கு வரி செலுத்த சென்றால் ஊராட்சி மன்ற செயலாளர் மனு கொடுத்து விட்டுச் செல்லுங்கள்.



தற்போது ஆன்லைன் சர்வர் வேலை செய்யவில்லை.

தலைவரிடம் வீட்டிற்கு சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என பல்வேறு காரணங்களை கூறி கடந்த மூன்று ஆண்டுகளாக வடிவேலுவை அலைக்கழித்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வடிவில் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் மனுவை கொடுத்துவிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் போன்ற அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீதும் புகார் அளித்துள்ளார்.

மேலும் தான் 2020-2021 ஆம் ஆண்டு வைத்திருக்கும் ரசீதில் உள்ள வரி விதிப்பு என்னை ஆன்லைனில் ஆய்வு செய்தால் அது பதிவாகவில்லை என வருகின்றது. இதனால் இங்கு வரி ஏய்ப்பு ஏதாவது நடந்திருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரியை முறையாக செலுத்தலாம் என மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஊராட்சி மன்றத்தை நாடினால் என்னை மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பி விடுகின்றனர் எனவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...