மூன்று ஆண்டுகளாக வீட்டு வரியை வாங்காமல் வீரணம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக வடிவேல் என்பவர் புகார்

வீட்டிற்கு வரி செலுத்த சென்றால் ஊராட்சி மன்ற செயலாளர் மனு கொடுத்து விட்டுச் செல்லுங்கள். தற்போது ஆன்லைன் சர்வர் வேலை செய்யவில்லை. தலைவரிடம் வீட்டிற்கு சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என பல்வேறு காரணங்களை கூறி கடந்த மூன்று ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளனர் என்று வடிவேலு என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு தோட்டம் பகுதியில் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருபவர் வடிவேல்.

இவர் இறுதியாக 2020 - 2021 ஆம் ஆண்டில் வீரணம்பாளையம் ஊராட்சி மன்றத்தில் தனது வீட்டிற்கு வரி செலுத்தி உள்ளார். அதற்குப் பிறகு 2022,2023 தற்போது 2024 ஆகிய வருடங்களுக்கு வீட்டிற்கு வரி செலுத்த சென்றால் ஊராட்சி மன்ற செயலாளர் மனு கொடுத்து விட்டுச் செல்லுங்கள்.



தற்போது ஆன்லைன் சர்வர் வேலை செய்யவில்லை.

தலைவரிடம் வீட்டிற்கு சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என பல்வேறு காரணங்களை கூறி கடந்த மூன்று ஆண்டுகளாக வடிவேலுவை அலைக்கழித்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வடிவில் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் மனுவை கொடுத்துவிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் போன்ற அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீதும் புகார் அளித்துள்ளார்.

மேலும் தான் 2020-2021 ஆம் ஆண்டு வைத்திருக்கும் ரசீதில் உள்ள வரி விதிப்பு என்னை ஆன்லைனில் ஆய்வு செய்தால் அது பதிவாகவில்லை என வருகின்றது. இதனால் இங்கு வரி ஏய்ப்பு ஏதாவது நடந்திருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரியை முறையாக செலுத்தலாம் என மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஊராட்சி மன்றத்தை நாடினால் என்னை மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பி விடுகின்றனர் எனவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...