உடுமலை அருகே திருமூர்த்தி மலை அடிவாரத்தில் பொன்னாலம்மன் கோவில் ஆண்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னாலம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து பொன்னாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய திருமூர்த்தி மலை பகுதியில் பொன்னாலம்மன் சோலை உள்ளது. தளி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தோட்டத்து சாலைகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் மலை அடிவாரப் பகுதியில் பொன்னாலம்மனுக்கு கோவில் எழுப்பி காலம் காலமாக வழிபாடு வருகின்றனர். அத்துடன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் கோவிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. கோவிலில் பொன்னாலம்மன் பரிவார கடவுள்களான விநாயகர், முருகன், சப்த கன்னிகள், கருப்பராயனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.



கோவிலில் இன்று ஆண்டு விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு வேள்வியும் பொன்னாலம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.



இதையடுத்து பொன்னாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வெங்கிடுசாமி, தண்டபாணி, ஈஸ்வரசாமி, தேவராஜ் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...