பொள்ளாச்சியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ராணுவத்தில் கூட ஒப்பந்தத்தை வழங்கி மிக கேவலமான ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையும் இணைப்பு விழா நிகழ்ச்சி வெங்கட்ரமணன் பள்ளி வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



அவர்களை கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர் .

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என கூறினார். ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ராணுவத்தில் கூட ஒப்பந்தத்தை வழங்கி மிக கேவலமான ஆட்சி நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். ராகுல் காந்தி நடைபயணத்துக்கு பிறகு எழுச்சியோடு இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி வருகின்றனர் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...