நீர்நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.03.2017) மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சுத்தமாகவும், பேணிபாதுகாப்பது மிக அவசியமாகும். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளோடு பொதுமக்களும் கைகோர்த்து நீர்நிலைகளை பேணிகாப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நீர்நிலைகளில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவது, பிளாஸ்டிக்கழிவுகள் மற்றும் திட, திரவுக்கழிவுகள் கொட்டுவதென்பது தடுக்கப்பட வேண்டும். மேலும், அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் விதிகளின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், பொதுமக்கள் தங்களது பட்டா நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறுபவர்களின் மீது அவற்றிற்குண்டான அபாராதம் விதிக்கப்படும். தமிழக அரசு, தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கோவை மாவட்டத்திலுள்ள குளங்கள் தூய்மை படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. எனவே, பொதுமக்களும் குளங்களை பாதுகாக்கும் மற்றும் தூய்மைபடுத்தும் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம், பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...