புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடை மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக மூடப்பட்டது

கோவையை அடுத்த அன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட  செங்காளிபாளையம் பகுதியில் நேற்று திடீரென டாஸ்மாக் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல் துறையினர்  சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் கடையை அப்பகுதியிலிருந்து அகற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்ததால் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட  டாஸ்மாக் மேலாளர் பிரபாகரன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதுடன், அப்பகுதியிலிருந்து கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் கடையை தற்காலிகமாக மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...