டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்களுக்கு இலவச மாதிரி தேர்வு - விண்ணப்பிக்க கோவை கலெக்டர் அழைப்பு

கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள்) டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி நேற்று (மார்ச்.4) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் வாயிலாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வன காப்பாளர் ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி IV (GROUP IV)ல் 6244 பணிக்காலியிடங்களுக்கான தேர்வானது 09.06.2024 அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 12.02.2024 முதல் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் TNPSC Group IV தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்கள் பயன்பெறும் வகையில் இலவச மாதிரித் தேர்வு கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கோவை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலையம் வாயிலாக 09.03.2024 (சனிக்கிழமை) அன்று மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் தங்களது TNPSC Group IV Application form நகலுடன் 09.03.2024 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கோவை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள் நடைபெறவுள்ள இலவச மாதிரித் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், மனுதாரர்கள் https://forms.gle/g8LgcvT4XjroSc1PA என்ற Google form வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும், அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு, பயனடையுமாறும் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...