குனியமுத்தூரில் நாளை (மார்ச்.6) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

குனியமுத்துார், கு.வடமதுரை மற்றும் கோவை மாநகர் மின் வாரிய அலுவலகங்களில் நாளை (மார்ச்.6) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: குனியமுத்துார் மின் வாரிய அலுவலகத்தில், நாளை (மார்ச்.6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் பங்கேற்கிறார். எனவே இதில் மக்கள் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை, நேரில் தெரிவித்து பயனடையலாம் என்று குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் இன்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், கு.வடமதுரை மின் வாரிய அலுவலகத்தில், நாளை (மார்ச்.6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேற்பார்வை பொறியாளர் (வடக்கு) செந்தில்குமார் பங்கேற்கிறார். இதில் மக்கள் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை, நேரில் தெரிவித்து பயனடையலாம் என்று கு.வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் இன்று தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் மின் வாரிய அலுவலகத்தில், நாளை (மார்ச்.6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேற்பார்வை பொறியாளர் (மாநகர், பொறுப்பு) வசந்தமுரளி பங்கேற்கிறார். இதில் மக்கள் பங்கேற்று, தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை, நேரில் தெரிவித்து பயனடையலாம் என்று செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் (மாநகர்) இன்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...