உடுமலையில் பட்டா மாறுதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம்-துண்டு விரித்து வட்டாச்சியர் அலுவலகம் முன்பு விவசாயி பிச்சை எடுக்கும் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும் 20-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் வேலைக்கு வரவில்லை. இதனால் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஊராட்சி இந்திராநகர் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்ற விவசாயி பட்டா மாறுதல் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் விண்ணப்பம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தினமும் அதிகாரிகள் தட்சிணாமூர்த்தியை அலைக்கழித்தாக கூறப்படும் நிலையில் இன்று வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கேட்டபோது அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நபர் ஒருவர் விண்ணப்பத்தை தூக்கி எறிந்தாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தட்சிணாமூர்த்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு துண்டு விரித்து பட்டா மாறுதல் செய்ய வருவாய்த் துறையினருக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வருவாய்த் துறையினர் விரைவில் பட்டா மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் கூறியதால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

வருவாய்த்துறையினர் கூறும் பொழுது. தற்சமயம் தமிழக முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும் 20-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் வேலைக்கு வரவில்லை. இதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பணியில் உள்ள அதிகாரிகளை வைத்து கள ஆய்வு மேற்கொண்டு பட்டா மாறுதல் செய்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பட்ட் மாறுதல் வழங்க அதிகாரிகள் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி விவசாயிகள் துண்டு விரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...