கோவை தடாகம் பகுதிகளில் உள்ள சேம்பர்களில் தொடர்ந்து பழைய இரும்புகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சின்னதடாகம் குட்ட வெலியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜீவானந்தம் என்ற மனோஜ் ஆகிய இருவரும் இரும்புகளை திருடி அந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக Hello Truck டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னதடாகம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் சோமயனூர் MNK செந்தில் ஆகியோரின் சேம்பரில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக பழைய இரும்பு பொருட்கள் திருட்டுபோனது.

இதைத்தொடர்ந்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் மற்றும் தடாகம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அந்தோணி காவலர்கள் முனீஸ், ஜனா, பூபதி, கார்த்தி மற்றும் தனிபிரிவு உதவி ஆய்வாளர் ஐய்யப்பன், தனிப்பிரிவு காவலர் செல்லகண்ணன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.

இதில் சின்னதடாகம் குட்ட வெலியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜீவானந்தம் என்ற மனோஜ் ஆகிய இருவரும் இரும்புகளை திருடி அந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக Hello Truck டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இந்த வாகனம் இரும்பு பொருட்களை ஏற்றி செல்லும் போது தடாகம் பகுதியில் உள்ள 12 CCTV camera மூலம் கண்டறிந்து இருவரையும் கைது செய்து போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மற்றும் 500 கிலோ இரும்பு ஆகியவை கைப்பற்றப்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...