உடுமலை பகுதி எழுத்தாளர் முத்து சுப்ரமணியனுக்கு சிறப்பு விருது அறிவிப்பு

நாளை 7-ம் தேதி சென்னை தரமணியில் நடைபெற உள்ள விழாவில் எழுத்தாளர் முத்து சுப்ரமணியனுக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. இவருக்கு தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: தமிழ்மொழியின் மேம்பாட்டினை முன்னிறுத்தி செயல்படும் எழுத்தாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூய தமிழ் பற்றார்களுக்கான விருதுகள் மாநிலத்தில் 21 நபர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மஸ்தான் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த முத்து சுப்ரமணியன்(75) என்பரும் அடங்குவார்.

இவருக்கு நாளை 7-ம் தேதி சென்னை தரமணியில் நடைபெற உள்ள விழாவில் பாராட்டு சான்றிதழுடன் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. வணிகவரி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற எழுத்தாளர் முத்து சுப்பிரமணியன் ஏற்கனவே 2019-ல் திருப்பூர் மாவட்டத்திற்கான தமிழ் செம்மல் விருதை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற முத்து.சுப்ரமணியனுக்கு தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...