பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் பூவோடு திருவிழா-வெள்ளித் தேரில் அம்மன் பவனி

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்தவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

நகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விரதம் இருந்து தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். முக்கிய நிகழ்வான வெள்ளித்தேரில் மாரியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் இருந்து இன்று முக்கிய வீதிகள் வழியாக செல்லும் தேரானது வெங்கட்ரமன் வீதியில் நிலைநிறுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை கோவிலை வந்தடையும். இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...