கோவை கவுமார மடத்தின் சொத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு

அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய கள ஆய்வு செய்து, கவுமார மடாலயத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கையை 8 வாரங்களில் செய்து முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கோவை: சென்னை ஐகோர்ட்டில், கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த சிவ பக்தரான சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டியில் உள்ள கவுமார மடாலயத்தை ராமுக்குட்டி என்பவர் நிறுவினார்.

இவர், சரவணம்பட்டியில் தனக்கு சொந்தமாக உள்ள 9.54 ஏக்கர் நிலத்தை தானமாக எழுதி வைத்தார். அதில் இருந்து வரும் வருமானத்தை மடாலயத்திற்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தநிலத்தின் ஒரு பகுதியை ரத்தினம் உள்ளிட்ட சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த புகார் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.



இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர், அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய கள ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கையை 8 வாரங்களில் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...