கோவை கவுமார மடத்தின் சொத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு

அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய கள ஆய்வு செய்து, கவுமார மடாலயத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கையை 8 வாரங்களில் செய்து முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கோவை: சென்னை ஐகோர்ட்டில், கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த சிவ பக்தரான சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டியில் உள்ள கவுமார மடாலயத்தை ராமுக்குட்டி என்பவர் நிறுவினார்.

இவர், சரவணம்பட்டியில் தனக்கு சொந்தமாக உள்ள 9.54 ஏக்கர் நிலத்தை தானமாக எழுதி வைத்தார். அதில் இருந்து வரும் வருமானத்தை மடாலயத்திற்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தநிலத்தின் ஒரு பகுதியை ரத்தினம் உள்ளிட்ட சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த புகார் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.



இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர், அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய கள ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கையை 8 வாரங்களில் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...