கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

மார்ச் 8-இல் தெற்கு மண்டலம், மார்ச் 9 -இல் மத்திய மண்டலம், மார்ச் 11-இல் கிழக்கு மண்டலம், மார்ச் 12-இல் மேற்கு மண்டலத்தில் முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று (மார்ச்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சிப் பகுதியில் பிரதமரின் ஆத்மநிர்பா் நிதி திட்டத்தின்கீழ் பதிவு செய்த சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்றிதழ்கள், மாநகராட்சி பிரதான அலுவலக தனி முகாமில் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படும்.

வடக்கு மண்டலத்தில் மார்ச் 7-ஆம் தேதி முகாம் நடைபெற்று முடிந்த நிலையில், மார்ச் 8-இல் தெற்கு மண்டலம், மார்ச் 9 -இல் மத்திய மண்டலம், மார்ச் 11-இல் கிழக்கு மண்டலம், மார்ச் 12-இல் மேற்கு மண்டலத்தில் முகாம்கள் நடைபெறும்.

எனவே, மாநகராட்சிப் பகுதிகளில் ஏற்கெனவே அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகள், தங்களின் ஆதார் அட்டை நகலைக் காண்பித்து அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...