தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 3 மாதம் சம்பளம் வழங்க கோரி உடுமலை குட்டைதிடல் பகுதியில் பெண்கள் போராட்டம்

100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கி முழுமையாக வழங்க வேண்டும் என சர்வதேச மகளிர் தினத்தன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு குடை பிடித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டைதிடல் பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உடுமலை ஒன்றிய கமிட்டி சார்பில் 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கி முழுமையாக வழங்க வேண்டும் என சர்வதேச மகளிர் தினத்தன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு குடை பிடித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாடுபட்ட தொழிலாளியை பட்டினி போடாதே, சம்பளத்தை உடனே வழங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டது.



அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உடுமலை ஒன்றிய தலைவர் ரங்கராஜ், சிபிஐஎம் கனகராஜ், சிஐடியூ செயலாளர் ஜெகதீசன் மற்றும் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது மேலும் இரண்டு நாளில் சம்பளம் வழங்கப்பட விட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய தொழிலாளர் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...