தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 3 மாதம் சம்பளம் வழங்க கோரி உடுமலை குட்டைதிடல் பகுதியில் பெண்கள் போராட்டம்

100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கி முழுமையாக வழங்க வேண்டும் என சர்வதேச மகளிர் தினத்தன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு குடை பிடித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டைதிடல் பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உடுமலை ஒன்றிய கமிட்டி சார்பில் 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கி முழுமையாக வழங்க வேண்டும் என சர்வதேச மகளிர் தினத்தன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு குடை பிடித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாடுபட்ட தொழிலாளியை பட்டினி போடாதே, சம்பளத்தை உடனே வழங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டது.



அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உடுமலை ஒன்றிய தலைவர் ரங்கராஜ், சிபிஐஎம் கனகராஜ், சிஐடியூ செயலாளர் ஜெகதீசன் மற்றும் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது மேலும் இரண்டு நாளில் சம்பளம் வழங்கப்பட விட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய தொழிலாளர் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...