உடுமலை ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

காலயாம பூஜையின்போது சுவாமிக்கு பச்சரிமாவு, நெல்லிப்பொடி, பால், தயிர், நெய், தேன், கரும்புச்சக்கரை, திராட்சை, விபூதி, சந்தனம், குங்குமம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தில்லை நகரில் நூறாண்டு பழமை வாய்ந் அருள்மிகு ரத்தினாம்பிகை உடனமர் ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை முதல் காலயாம பூஜையும், அதைத் தொடர்ந்து இரண்டாம் காலயாம பூஜையும், மூன்றாம், நான்காம் காலயாம பூஜையும் நடைபெற்றது.

முதலாம் காலயாம பூஜையில் வெள்ளி அலங்காரமும், இரண்டாம் காலயாம பூஜையில் சந்தன அலங்காரமும், மூன்றாம் காலயாம பூஜையில் விபூதி அலங்காரமும், நான்காம் காலயாம பூஜையில் குங்கும அலங்காரமும் சுவாமிக்கு செய்யப்பட்டது.

ஒவ்வொரு காலயாம பூஜையின்போது சுவாமிக்கு பச்சரிமாவு, நெல்லிப்பொடி, பால், தயிர், நெய், தேன், கரும்புச்சக்கரை, திராட்சை, விபூதி, சந்தனம், குங்குமம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டது.

மேலும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான ஒவ்வொரு அபிஷேக பொருட்களும் சுவாமிக்கு தனித்தனியாக படைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு காலயாம பூஜையின் போதும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ரத்தின லிங்கேஸ்வரர் சுவாமியை வழிபாடு செய்தனர். பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சுவாமியை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக தேவராட்டம், பரதநாட்டியம், ஆடல்பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...