கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை மற்றும் நலத்திட்ட விளக்கம் குறித்த புகைப்பட கண்காட்சி

தேர்தலில் முடிவு எடுப்பதில் பொதுமக்கள் தெளிவாக இருப்பதாகவும், அதில், திமுக வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் நினைப்பதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் விளக்கம் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.



மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,



தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கை இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டதாகவும், குறிப்பாக இந்த பகுதியில் பல்வேறு தரப்பட்ட மக்களும் வந்து செல்வதால் அவர்கள் அனைவரும் தமிழக அரசின் சாதனைகளையும் நலத்திட்ட உதவிகளையும் அது குறித்தான விளக்கங்கள் அடங்கிய இந்த புகைப்பட கண்காட்சியை பார்க்க ஏதுவாக இருக்கும் என்பதால் தான் இங்கு இந்த கண்காட்சி அரங்க அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

வேட்பாளர் குறித்து தலைமையில் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் முடிவு எனவும், அது பேச்சுவார்த்தையில் இருக்கும்போது நாங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

தேர்தலில் பொதுமக்கள் எடுக்க வேண்டிய முடிவில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் எனவும், திமுக தான் சரியாக இருக்கும் அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்குறார்கள், பல கருத்து கணிப்புகள் அதை தான் சொல்கிறது என்றும் அண்ணாமலை சொல்வதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் எல்லோருமே கலைஞர் பெயரை சொல்லி தான் கூட்டணி சார்பில் ஓட்டு கேட்டு கொண்டு இருக்கிறோம் என்றும் இதில் என்ன புதிதாக தவறு கண்டு பிடித்தார் என்று தெரியவில்லை என்றும், இதுவெல்லாம் ஒரு குற்றச்சாட்டு இதுக்கெல்லாம் பதில் சொல்வதெல்லாம் தேவையில்லாத வேலை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...