ஏலச்சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஏலச்சீட்டு நடத்தி பணத்தை ஏமாற்றிய திருமூர்த்தி-சாந்தி தம்பதியினரிடமிருந்து 21 லட்சம் ரூபாயை வாங்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் நஞ்சப்பா நகர் பகுதியில் வசித்து வந்த திருமூர்த்தி-சாந்தி தம்பதியினர் கடந்த ஆறு வருடங்களாக எலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சீட்டு சேர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏலச்சீட்டை நிறுத்துவதாகவும் தங்களால் நடத்த முடியவில்லை எனவும் தங்கள் கட்டிய பணத்தை வீட்டை விற்று ராம் லட்சுமி என்ற வழக்கறிஞர் மூலம் திருப்பித் தருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வீடு விற்ற பணத்திலிருந்து ராம் லட்சுமி ஆபிஸில் வைத்து 17 பேருக்கு மட்டும் பணம் வழங்கியதாகவும், மேலும் 26 பேருக்கு 21 லட்சம் ரூபாய் வரை தரவேண்டிய நிலையில் பணம் தர முடியாது என தெரிவிப்பதாகவும் இது குறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஏமாற்றியவர்களிடமிருந்து பணத்தையும் வாங்கி தர வேண்டும் என அவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...