கோவை கற்பகம் செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் உறுதிமொழி எடுக்கும் விழா

கே.என்.சி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் 16 வது தொகுதிக்கு உறுதிமொழி எடுக்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையை வழங்கினர்.


கோவை: கற்பகம் செவிலியர் கல்லூரியின் நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் 16 வது தொகுதிக்கு "உறுதிமொழி எடுக்கும் விழா" மார்ச் 9, 2024 அன்று கே.என்.சி ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்தனர்.



இந்நிகழ்ச்சியை சிறபிக்க வந்தவர்கள் தலைமை விருந்தினர் டாக்டர். சுபா சூரியா பஞ்சலிங்கம், எம்.எஸ்.சி (நர்சிங்), பி.எச்.டி, எம்.பி.ஏ, செவிலியர் சேவைத் தலைவர், கஸ்தூரிபா மருத்துவமனை, மணிப்பால் மாநிலம் மற்றும் சிறப்பு அழைப்பாளர் கர்னல் டாக்டர். வி.வெங்கடேசன், வி.எஸ்.எம், மருத்துவ இயக்குநர், கற்பகம் மருத்துவமனை; திரு. சிவகுமார், பொது மேலாளர், கற்பகம் மருத்துவமனை. இந்நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.



கற்பகம் செவிலியர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சுதா வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு குத்துவிளக்கேற்றி, பின்னர் சிவகாமி, உதவிப் பேராசிரியர் மாணவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



இந்த நாளின் முக்கியத்துவம் பேராசிரியர் இலக்கியாவால் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் ஊக்கமளிக்கும் உரையை வழங்கினார். இணைப் பேராசிரியர் சாந்தா, இணைப் பேராசிரியர் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...