கோவை பெரியநாயக்கன்பாளையம் புதிய மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கோவையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 1.76 கி.மீ நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை இன்று (மார்ச்.11) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


கோவை: தேசத்தின் முக்கிய நகரங்களை இணைக்கிற வகையிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்.11) துவக்கி வைத்தார்.

அதன்படி கோவையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 1.76 கி.மீ நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை இன்று (மார்ச்.11) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் J. ராமகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தல் படி மாவட்ட பொது செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்டத் துணைத் தலைவர் மகாலட்சுமி. கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட செயலாளர் சௌந்தர்ராஜன், பெரியநாயக்கன்பாளையம் மண்டல் தலைவர்கள் மகேந்திரன், ஜெயபிரகாஷ் புவனேஸ்வரன் ஆகியோருடன் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்கள்.

மேலும் இதேபோல 905 கோடி ரூபாய் மதிப்பில், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலைப் பணி அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், இவற்றை உள்ளடக்கி 3200 கோடி ரூபாய் மதிப்பிலானபணி நிறைவடைந்தவற்றை திறந்து வைத்ததோடு, அடிக்கலும் நாட்டினார்.

ஒட்டுமொத்தமாக தேசிய அளவில், 112 நெடுஞ்சாலை மற்றும் மேம்பாலப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...